PM kisan 14 வது தவணை தேதி சொல்லியாச்சு- உங்களுக்கு வருமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

PM Kisan 14th installment Beneficiary list check here

PM kisan திட்டத்தின் கீழ் 14 வது தவணையாக ரூ.2000 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பயனாளியின் பட்டியலில் உள்ளீர்களா என்பதே எப்படி பார்ப்பது என்பது குறித்து இப்பகுதியில் காணலாம்.

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 8.5 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

இதனிடையே PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணையினை வருகிற ஜூலை 27, 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் நடைப்பெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளியின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். விவரம் பின்வருமாறு:

  • PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் https://pmkisan.gov.in/
  • வலதுபுறத்தில் உள்ள 'பயனாளிகள் பட்டியல்' (Beneficiary List) என்பதைக் கிளிக் செய்யவும்
  • அதன்பின் தோன்றும் பக்கத்தில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் என்கிற கேள்விகளுக்கு சரியான விவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
  • இதன்பின் 'Get Report' டேப்பினை கிளிக் செய்யவும்
  • 14-வது தவணை பெறும் பயனாளிகளின் பட்டியல் விவரம் அப்பக்கத்தில் வரும். அவற்றில் உங்களது பெயரை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்- 155261/011-24300606. நீங்கள் மெயில் மூலமாகவும் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். ([email protected])

PM Kisan Yojana அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 13-வது தவணை நிதியுதவினை பெற பதிவு செய்துள்ளனர். ஆனால் 8.69 கோடி விவசாயிகள் மட்டுமே 13-வது தவணையின் கீழ் தலா ரூ.2,000 பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 3.30 கோடி பதிவு செய்த விவசாயிகள் பல காரணங்களால் நிதியுதவி பெற முடியவில்லை. இவர்களில் சிலர் பயனாளிகள் அல்லாதவர்கள், மற்றவர்கள் சரிபார்ப்பு முடிக்கப்படாததால், புதிய தவணைகளின் பலனைப் பெற இயலவில்லை என கூறப்பட்டது.

PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

தக்காளி வாங்க நல்ல நாள்- ஒரே நாளில் விலை அதிரடி குறைவு

குடும்பத்தலைவிக்கான ரூ.1000- சென்னையில் நாளை முதல் டோக்கன்

English Summary: PM Kisan 14th installment Beneficiary list check here

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
OSZAR »