
Plastic is banned in the whole country!
இன்று முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை என அறிவிப்பு வெளிவந்துள்ளது. எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸிட்க் பொருட்களுக்கு (Single use plastic) அதாவது, ரிசைக்லின் செய்யமுடியாத் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் (ஜூலை 1ஆம் தேதி) முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு முன்னரே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்திருக்கிறது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
இந்த தடையினால், பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது, இறக்குமதி செய்வது, சேகரிப்பது விநியோகிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது என அனைத்து செயல்களுக்கும் தடை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்?
எவ்வகை பொருட்களுக்குத் தடை?
இன்று முதல் அமல்படுத்தப்படும் தடையால் எந்த பொருட்கள் இனி உபயோகத்தில் இருக்கக் கூடாது என கீழ் கொடுக்கப்படுகிறது.
- பிளாஸ்டிக் தட்டு
- பிளாஸ்டிக் கப்
- பிளாஸ்டிக் கத்தி
- பிளாஸ்டிக் ஸ்பூன்
- பிளாஸ்டிக் ஃபோர்க்
- பிளாஸ்டிக் டிரே
- யெர்பட்ஸ் (Earbuds)
- பலூன் குச்சிகள்
- சிகரெட் பாக்கெட்டுகள்
மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
ஸ்வீட் பாக்ஸ்
மிட்டாய் குச்சிகள்
ஐஸ் கிரீம் குச்சிகள்
அழைப்பிதழ்கள்
அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் பாலிஸ்டிரின் (polystyrene)
100 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிவிசி பேனர்கள்(PVC Banner) முதலானவையாகும்.
மேலும் படிக்க
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!
புதிய செய்திகள்: இனி சிலிண்டர் விலை இதுதானா? விலையில் சரிவு!
Share your comments