News

Wednesday, 19 April 2023 10:22 PM , by: R. Balakrishnan

DA Hike in Tamilnadu

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 42% ஆக உயரும்.

அகவிலைப்படி உயர்வு (DA hike)

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7- வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த மாதம் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது இதனை எடுத்து மத்திய அரசு ஊழியர்களின் கவிதை படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைபடியை 4 % உயர்த்தி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு (Tamilnadu)

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 3% வெயிட்டேஜ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்தாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களை போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் மொத்தம் 42% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)